ராஞ்சி: மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக்கி சமீபத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. இந்த புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த 1ம் தேதி முதல் இது
அமலுக்கு வந்தது. ஆனால், அபாரத தொகை அதிகம் காரணமாக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், ‘மாநில அரசுகள் விரும்பினால் போக்குவரத்து விதிகளை மீறுவோறுக்கான அபராதத் தொகையை தளர்த்திக் கொள்ளலாம்,’ மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் அபராதத் தொகையை குறைத்தும், தளர்த்தியும் உத்தரவிட்டு வருகின்றன.