சென்னை: மும்பையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.15 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. அதில் திருச்சியை சேர்ந்த விஜயராகவன் (33) என்பவர் மும்பையில் இருந்து வந்திருந்தார். அவரை அதிகாரிகள் விசாரித்தபோது, ‘‘நான் உள்நாட்டு பயணி. என்னை சோதனையிட கூடாது’’ என்று எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் அவரது கைப்பையை சுங்கத்துறை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அதில் கருப்பு கார்பன் பேப்பரில் சுற்றப்பட்டு 12 லட்சம் மதிப்பில் 300 கிராம் எடை கொண்ட தங்கம் இருப்பது தெரிந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து விஜயராகவனை கைது செய்தனர். இதற்கிடையே நேற்று காலை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஏர் ஏசியா விமானத்தில் காலை 8.30 மணிக்கு மலேசியாவை சேர்ந்த நூர்லினா (40) சென்னை வந்திருந்தார்.