கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன், காங்கிரஸ் கூட்டணி அமைக்க அதன் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.மேற்குவங்கத்தில் கலியாகஞ்ச், காரக்பூர் மற்றும் கரீம்பூர் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல் 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், கரீம்பூரில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணியும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உடன்பாடு குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து, இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடும் முடிவை தெரிவித்தார். இதற்கு சோனியா காந்தி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.