நாட்டில் நிலவி வரும் பொருளாதார தேக்கநிலை தொடர்பாக மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி : நாட்டில் நிலவி வரும் பொருளாதார தேக்கநிலை தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதாரத்தில் தேக்கநிலை நிலவி வருகிறது. இது தொடர்பாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் மற்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ஷமிகா ரவி உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: