இயற்கை காட்சி முனைக்கு செல்ல அனுமதிக்க வலியுறுத்தல்

வால்பாறை:  வால்பாறை பொள்ளாச்சி சாலையில் 9வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள இயற்கை காட்சி (லோம்ஸ் வியூ பாய்னட்) முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல பொள்ளாச்சி வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். எனவே அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் நிற்கவோ, காட்சி முனையை பார்க்கவோ அனுமதி கிடையாது என அறிவித்தும், காவலர்கள் நியமித்து கண்காணித்தும் வருகின்றனர். இந்நிலையில் வனத்துறையினர் காட்சிமுனை பகுதியில் பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் அமைத்து மேம்படுத்தி உள்ளனர். மேலும் கேட்டும் பொறுத்தி உள்ளனர். இனால் சமூக விரோதிகள் அப்பகுதிக்குள் இரவு நேரங்களில் முகாமிட்டு மது அருந்தவும் புகை பிடிப்பதும் தடை செய்யப்பட்டு உள்ளது. இதற்காக வனத்துறைக்கு இயற்கை ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.இந்நிலையில் இயற்கை காட்சி முனையை பார்வையிட செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் அனுமதியளிக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்….

The post இயற்கை காட்சி முனைக்கு செல்ல அனுமதிக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: