பெரம்பூர்: தண்டையார்பேட்டை அகத்தீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (51). இவருக்கு யோகலட்சுமி (45) என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரவிக்குமார், தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கும்மாளம்மன் கோயில் தெரு சந்திப்பில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான அம்மா குடிநீர் விநியோக மையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்தவர் இரவு வீடு திரும்பவில்லை. உடனே, உறவினர்கள் அவர் வேலை செய்யும் இடத்தில் வந்து பார்த்தபோது விநியோக மையத்தின் அறையில் ரவிக்குமார் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார்.