ஆவடி: ஆவடி அருகே கஞ்சா விற்கும் தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தில் 2 பேருக்கு வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவேற்காடு பவானி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (26). பிரபல ரவுடி. நேற்று முன்தினம் மாலை ராஜேஷ் தனது நண்பர்களுடன் ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் உள்ள காலி மைதானத்தில் அமர்ந்து மது அருந்தினார். அப்போது 5க்கும் மேற்பட்டவர்கள் வந்து ராஜேஷுடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜேஷை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதை தடுத்த அவரது நண்பர் விஷாலுக்கும் வெட்டு விழுந்தது.