அகமதாபாத்: சந்திரயான்-2 விண்கலம், நிலவின் சுற்று வட்டப்பாதையை வரும் 20ம் தேதி சென்றடைகிறது எனவும், அடுத்த மாதம் 7ம் தேதி அது நிலவில் தரையிறங்குகிறது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என போற்றப்படும் டாக்டர் விக்ரம் சாராபாயின் 100வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இஸ்ரோ தலைவர் சிவன் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் சென்றிருந்தார். அவரிடம் சந்திரயான்-2 விண்கலத்தின் செயல்பாடுகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த மாதம் 22ம் தேதி ஏவிய பின், 5 முறை அதன் சுற்றுவட்டப் பாதையை உயர்த்தும் பணியில் ஈடுபட்டோம்.