திருமலை: ஆந்திராவில் சாலை வசதி இல்லாததால் பிரசவத்திற்காக கர்ப்பிணியை கொட்டும் மழையில் 8 கி.மீ. தூரம் டோலி கட்டி தூக்கி வந்தனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் அடிப்படை வசதி, மருத்துவ வசதி, சாலை வசதி யின்றி தவித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் நோயால் தாக்கப்பட்டால் தங்களுக்குத் தெரிந்த நாட்டு மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். கடுமையான நோயால் உடல்நிலை மிகவும் மோசமாகும்போது டோலி கட்டி சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் வட்டாலிமடுகுல மண்டலம், சங்காரம் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி ஜானப்பரெட்டி தேவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து உடனடியாக டோலி கட்டி 15 கி.மீ. தூரம் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். அப்போது கனமழை கொட்டியது.