ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே ஆடு, கோழிகளுக்கு மயக்க ஸ்பிரே அடித்து அவற்றை திருடி சென்றது சிசிடிவி கேமரா மூலம் அம்பலமானது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள ஆலங்காட்டூர், கோரக்காட்டூர், கடுக்கம்பாளையம், சின்னகொரவன்பாளையம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 2 மாதங்களாக 25 வெள்ளாடுகள் மற்றும் 50க்கும் அதிகமான நாட்டுக்கோழிகள் திருடுபோயுள்ளன. முதலில் இது ஏதோ விலங்குகளின் செயல் என விவசாயிகள் எண்ணியுள்ளனர். ஆனால் அவர்கள் நினைத்ததை தவறு என்பதை ஆலங்காட்டூரில் ஒரே இரவில் நடந்த 3 திருட்டுகள் உறுதிப்படுத்தின. இதை தொடர்ந்து சதாசிவம் என்பவரது தோட்டத்தில் 18 நாட்டுக்கோழிகள் மற்றும் 1 வெள்ளாடு, மேலும் மூர்த்தி என்பவரது தோட்டத்தில் 6 நாட்டுக்கோழிகள், கோடிஸ்வரன் தோட்டத்தில் 1 வெள்ளாடு முதலியவை ஒரே இரவில் மாயமாயின. இதையடுத்து இதில் சதாசிவம் தோட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது.