திருவொற்றியூர்: ஆந்திராவில் இருந்து பேருந்து மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து, மாதவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மாதாவரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜவஹர் தலைமையில் போலீசார் ஆந்திர பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் ஆந்திர பஸ் நிலையத்திலிருந்து ஆட்டோவில் பெரிய மூட்டையுடன் 2 பேர் சந்தேகத்திற்கிடமாக வருவதை கண்ட போலீசார், ஆட்டோவை மடக்கினர். ஆனால், ஆட்டோ நிற்காமல் மின்னல் வேகத்தில் பறந்தது. உடனே, போலீசார் விரட்டி சென்று அந்த ஆட்டோவை மடக்கி பிடித்து, சோதனையிட்டனர்.