குர்கானை: இண்டிகோ விமான நிறுவனத்தின் ஜூன் மாதத்தோடு முடிந்த முதல் காலாண்டின் நிகர் லாபம் 43 மடங்கு அளவாக உயர்ந்து ரூ.1,203 கோடியாக நிலைபெற்று இருக்கிறது. நிறுவனம் தொடங்கிய நாளில் இருந்து தற்போது தான் அதிக லாபம் கிடைத்திருப்பதாக இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ரோனோஜாய் தத்தா தெரிவித்திருக்கிறார். விமான பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி சரக்கு விமான போக்குவரத்து சேவை மூலமாகவும் சுமார் ரூ.9,500கோடி அளவிற்கு வருவாய் அதிகரித்து இருப்பதால் நல்ல லாபம் கிடைப்பதாக அவர் கூறினார். கடந்த ஆண்டில் இதே காலாண்டில், இண்டிகோ நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.27.80 கோடியாக இருந்தது.