புதுடெல்லி: ‘‘காவிரி நீர் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள். இங்கே, வேண்டாம்’’ என கர்நாடக பாஜ எம்பி.யிடம் சபாநாயகர் ஓம் பிர்லா கூறியது, அவையில் சிரிப்பை ஏற்படுத்தியது.மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசிய கர்நாடக பாஜ எம்பி சோபா கரந்த்லாஜே, ‘‘கர்நாடகாவின் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால், காவிரி நீர் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் பிரச்னை நிலவுகிறது,’’ என எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த தமிழக, கேரளா எம்பி.க்களை சுட்டிக் காட்டி பேசினார். அப்போது, குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘இந்த சண்டையை வெளியே போடுங்க... இங்க, அதெல்லாம் வேணாம்...’’ என்று நகைச்சுவையாக கூறினார். இதை கேட்டு அவை உறுப்பினர்கள் சிரித்தனர்.