காரைக்குடி: காரைக்குடி சுற்றுச்சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் வாகனங்களில் செல்வோரின் கண்களை பதம்பார்க்கின்றன. காரைக்குடியில் திருச்சி-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை போடப்பட்டு ஏழு வருடங்களுக்கு மேல் ஆகின்றன. தற்போது இருவழி சாலை மட்டுமே போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. காரைக்குடியை சுற்றியுள்ள இச்சாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஒதுக்கப்பட்ட பாதையின் ஓரங்களில் கருவேல மரங்களின் கிளைகள் நீட்டிக்கொண்டுள்ளன. இவை இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்க்கின்றன. இதேபோன்று சூரக்குடி, ஆவுடபொய்கை, நேமத்தான்பட்டி போன்ற ஊர்களிலும் கருவேல மரங்கள் வளர்ந்து சாலையை மறைத்துள்ளன. இது குறித்து வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், காரைக்குடி முதல் திருச்சி வரை செல்லும் இச்சாலைக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.