சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே அமைக்கப்பட்டுள்ள மண்புழு உரக்கூடம், பயன்பாட்டுக்கு வராமலேயே பாழாகி வருகிறது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மிராளூர் கிராமத்தில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு, மண்புழு உரம் தயாரிப்பதற்காக கடந்தாண்டு ரூ.1 லட்சம் மதிப்பில் கீற்று கொட்டகையில் மண்புழு உரம் தயாரிக்கும் தொட்டிகள் அமைக்கப்பட்டது. இதுவரை உரம் தயாரிக்கும் கொட்டகை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பாழாகிறது.