மேகதாதுவில் அணைக்கட்டும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: ேமகதாது அணை கட்ட கோரும் கர்நாடக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. மேகதாதுவில் 5,912 கோடியில் அணையும், சுமார் 400 மெகாவாட் திறன்கொண்ட மின் உற்பத்தி நிலையமும் அமைப்பதற்கான திட்ட வரைவு மத்திய அரசிடம் அளித்தது.

இதை ஏற்றுக்கொண்ட மத்திய நீர் வளக் குழுமம் 2018ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆய்வு அனுமதியை கர்நாடகாவுக்கு வழங்கியது.மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. கர்நாடகத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: