லக்னோ: பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய பகுஜன் சமாஜ் எம்.பி.யை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீது தேர்தல் வழக்கிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மக்களவை தேர்தலின்போது, உ.பி.யின் கோசி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அதுல் ராய் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளர்கள் தங்கள் மீதான வழக்குகள் பற்றிய விவரங்களை பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடுவதுடன், அது குறித்து பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும். ஆனால், அதுல் ராய் தன் மீதான வழக்குகள் பற்றி குறைத்து தெரிவித்துள்ளதாக பாஜ சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது.