புதுடெல்லி: வாட்ஸ் ஆப்பில் போலி செய்திகளை பரப்புவது யார் என்பதை கண்டறிய, கைரேகை பதிவு வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் போலி தகவல்கள் ஏராளமாக வருகின்றன. இதனால் சமூக மற்றும் அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன. போலி தகவல்களால் பலர் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், வாட்ஸ் ஆப் நிறுவனம் தனிநபர்களிடையே தகவல்கள் பகிரப்படுவதை பாதுகாக்கும் விதமாக எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், போலி தகவல்களை முதலில் பரப்பியது யார் என்று தெரிவதில்லை.