பாகிஸ்தானில் ரயில்கள் மோதல் 3 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானில் சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் ேமாதியதில் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து லாகூர் நோக்கி ஜின்னா எக்ஸ்பிரஸ் ரயில்  சென்று கொண்டிருந்தது. இதேபோல், யூசூப்வாலாவை சேர்ந்த சரக்கு ரயில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. சிந்த் மாகாணத்தில் வந்தபோது சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் ஓட்டுனர், 2 உதவியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ரயிலில் இருந்த பயணிகள் பலர் காயமடைந்தனர்.

மேலும், சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் சேதமடைந்தன. ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். ரயில் பெட்டிகள் சேதம் அடைந்ததால் அந்த வழிதடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சரக்கு ரயிலின் சேதமடைந்த பெட்டிகள் அகற்றப்பட்ட பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

Related Stories: