கராச்சி: பாகிஸ்தானில் சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் ேமாதியதில் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து லாகூர் நோக்கி ஜின்னா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இதேபோல், யூசூப்வாலாவை சேர்ந்த சரக்கு ரயில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. சிந்த் மாகாணத்தில் வந்தபோது சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் ஓட்டுனர், 2 உதவியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ரயிலில் இருந்த பயணிகள் பலர் காயமடைந்தனர்.