ராணிப்பேட்டை அருகே 6 வயது குழந்தையை கொன்ற தாய்: சடலத்தை புதைத்து விட்டு காணவில்லை என நாடகம்...!

வேலூர்: ராணிப்பேட்டை அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் தனது 6 வயது குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள காவியா என்பவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ராமச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர் கணவருடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தாய் வீடு உள்ள வாலாஜாபேட்டைக்கு வந்துவிட்டார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த தியாகு என்பவருடன் தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. காவியாவின் முன்னாள் கணவரின் 6 வயது குழந்தை தாயுடன் வந்துவிட்டதால் தாய் அந்த குழந்தையை வளர்த்து வந்தார்.

இந்நிலையில் காவியா குழந்தையை வளர்த்து வந்துள்ள நிலையில் தியாகு என்பவர் குழந்தையின் மீது வெறுப்பு அடைந்துள்ளார். யாரோ பெற்ற மகனை நான் எதற்காக வளர்க்க வேண்டும் என்ற கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் அடிப்படையில் கடந்த 13-ம்  தேதி தனது வீட்டினிலேயே அந்த குழந்தையை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்துள்ளனர். காவியா - தியாகு ஆகியோரின் தகாத தொடர்பு காரணமாக தனது குழந்தையை கொலை செய்துள்ளனர். கொலை செய்து ஆற்காடு அருகே உள்ள பாலாற்றில் அந்த குழந்தையை புதைத்துள்ளனர். புதைத்தவுடன் தனது குழந்தை காணவில்லை என வாலாஜா பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் காவியா புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர் இவர்கள் நடத்திய நாடகத்தை கண்டு பிடித்தனர். தியாகுவும், காவியாவும் உடன் சேர்ந்து 6 வயது குழந்தை தருணை கொலை செய்து பாலாற்றில் புதைத்திருந்தது தெரிய வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை காவியா காண்பித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டனர். இதனை தொடர்ந்து தியாகு, காவியாவிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: