தஞ்சையில் தொடக்கக்கல்வி இயக்குநர் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி ரூ.1.25 கோடி மோசடி

தஞ்சாவூர்: தொடக்கக்கல்வி இயக்குநர் கையெழுத்தை போலியாக போட்டு தஞ்சாவூர்,திருவாரூர் மாவட்ட பள்ளிகளில் ரூ.1.25 கோடி மோசடி செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில்  1995 முதல் 1998 வரை இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் விதிகளுக்கு புறம்பாக 42 பட்டதாரி ஆசிரியர்கள்  நியமிக்கப்பட்டனர். ஆனால் 1995 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில் அவர்களின்  நியமனம் செல்லாது என உத்தரவிட்ட தொடக்க கல்வி இயக்குனரகம் 2003 ஜூன் முதல் பணிநியமனம் வழங்கி, அன்று முதல் சம்பளத்தை கணக்கிட்டு வழங்க உத்தரவிட்டது. இந்த நிலையில் 42 ஆசிரியர்களில் 12 பேருக்கு அவர்கள் பணிநியமனம் செய்யப்பட்ட 1995 முதலான காலத்தை கணக்கில் கொண்டு 1.25 கோடியை சம்பளமாக வழங்க தொடக்க கல்வி இயக்குனரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி ஒரு உத்தரவை தயாரித்து  தஞ்சை மாவட்ட தொடக்க கல்வி அலுவலரே அரசு கருவூலத்துக்கு அனுப்பியது தெரிய வந்துள்ளது.

           

2003-ல்நடந்த மோசடி 16 ஆண்டுக்கு பிறகு தகவல்அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மோசடி செய்த 12 ஆசிரியர்களிடம் இருந்து ரூ.1.25 கோடியை பெற்றுத்தர தஞ்சாவூர், திருவாரூர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: