புதுச்சேரி: புதுச்சேரியில் ஏ.சி. இயந்திரத்திற்குள் பாம்பு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏ.சியை பொருத்தும் போது விழிப்புணர்வோடு இல்லாவிட்டால் இதுபோன்று நிகையும் என்கிறார்கள் வனத்துறையினர். புதுச்சேரி தேங்காய்திட்டு சாய்ஜீவா சரோஜினி நகரை சேர்ந்த ஏழுமலை ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இவரது வீட்டு படுக்கையறையில் உள்ள ஏ.சி. இயந்திரத்தை இயக்கும்போதெல்லாம் வித்யாசமான சத்தம் வந்துள்ளது. அதனால் ஏ.சி. பழுதடைந்து விட்டதோ என நினைத்த ஏழுமலை அதனை சரி செய்ய மெக்கானிக்கை அழைத்துள்ளார். அப்போதுதான் ஏ.சிக்குள் பாம்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பாம்பை பிடிப்பதற்காக வனத்துறையினர் ஏ.சி. இயந்திரத்தை திறக்கும் போது தான் அதிர்ச்சி ஏற்பட்டது.