திருவள்ளூர் மாவட்டம் பெருஞ்சேரியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெருஞ்சேரியில் தென்னை மரத்தில் இளநீர் பறித்தபோது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். இளநீர் பறித்தபோது அருகில் சென்ற மின்கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் தட்சிணாமூர்த்தி என்பவர் உயிரிழந்தார். தட்சிணாமூர்த்தியை காப்பற்ற முயன்ற அவரது பெரியப்பா விஸ்வநாதன் என்பவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: