கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஹவுரா பாலம் அருகே ரசாயன கிடங்கில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கொல்கத்தாவில் ஹவுரா பிரிட்ஜ் அருகே உள்ள ஜகன்னாத் காட் பகுதியில் ரசாயன கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு பல்வேறு வகையான ரசாயனங்கள் வைக்கப்பட்டிருந்தன. இங்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்க கடுமையாக போராடின. சுமார் பத்து மணி நேரப் போராட்டத்துக்கு பின்னரே தீ அணைக்கப்பட்டது.