விஜயவாடா: புற்றுநோய் பாதித்த மாணவனுக்கு உடனடியாக உதவியதன் மூலம், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மாணவர்களிடம் ஹீரோவாக மாறி உள்ளார். ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், 175ல் 151 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றுள்ளார். இதேபோல் மக்களவை தொகுதிகளிலும் 22ஐ கைப்பற்றி உள்ளார். அவரது கொள்கைகள் மாணவர்கள் தரப்பில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டிணத்தில் உள்ள ஸ்வரூபானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்குச் சென்றார். அப்போது விமான நிலையத்துக்கு அருகே வரும்போது, சில கல்லூரி மாணவிகள் பதாகைகளுடன் முதல்வர் பார்வையில் படும்படி நின்றிருந்தனர். அவர்களைப் பார்த்த ஜெகன் மோகன், அருகில் அழைத்து விசாரித்தார்.