காஷ்மீரில் கொல்லப்பட்ட தீவிரவாதி பாகிஸ்தானியர்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகளுக்கும் படைக்கும் இடையே சோபியான், புல்வாமா மாவட்டத்தில் நடந்த 2 தனித்தனி மோதலில் 4 தீவிரவாதிகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். .இதில், புல்வாமாவின் அவந்திபுரா பகுதியில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதி தர்கனி குந்த் டிரால் பகுதியை சேர்ந்த யவார் அகமது நாஜர் என தெரியவந்துள்ளது. மற்றொருவர் பாகிஸ்தானியர் என்பதும், அவரது ரகசிய பெயர் உமர் என்பதும் தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட இருவரும் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள். அவந்திபோரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புள்ளவர்கள். அவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related Stories: