ஸ்ரீநகர்: காஷ்மீரில் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ளது கோகர்நாக். இங்குள்ள கச்சுவான் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் அளித்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர்.