ரூ70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் அதிரடி கைது

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சாலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சரவணன்(41). பேக்கரி மற்றும் ஓட்டல் கடை வைத்துள்ளார். கடந்த 14ம் தேதி கடைக்கு அருகில் படுத்திருந்த பேக்கரி கடை ஊழியர்கள் 2பேரை ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் நடராஜன், பிடித்து சென்று அவர்கள் மீதும் சரவணன் மீதும் தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்ததாக கூறி வழக்கு பதிவு செய்வதாக மிரட்டியுள்ளார். வழக்கு போடாமல் இருக்க ரூ2.25 லட்சம் கேட்டுள்ளார். இதுபற்றி சரவணன் லஞ்ச ஒழிப்பு துறையில் நேற்று புகாரளித்தார். இதையடுத்து அவர் போலீசார் கொடுத்த ரூ70 ஆயிரத்தை நடராஜனிடம் கொடுத்தார். அவர் வாங்கியதும் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடராஜனை கைது செய்தனர்.

Related Stories: