உதகை மண்டலத்தில் மலர் கண்காட்சி நிறைவு...5 நாள் கண்காட்சி பல ஆயிரம் பேர் ரசித்தனர்

உதகை: உதகை மண்டலத்தில் நடைபெற்று வரும் 123-வது மலர் கண்காட்சியின் இறுதி நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.  உதகை மண்டலத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 17-ம் தேதி மலர் கண்காட்சி தொடங்கியது. 5 நாள் கண்காட்சிகாக 15 ஆயிரம் தொட்டிகளில் பல ஆயிரம் மலர்கள் வைக்கப்பட்டு இருந்தது. மலர்களால் உருவாக்கப்பட்ட வன விலங்குகள், நாடாளுமன்றம் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.

கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த தனியார் தோட்ட மலர்களும், அரசு மலர் தோட்டத்துக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதில் 380 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். மொத்தம் 700 பரிசு கோப்பைகள் வழங்கப்பட உள்ளது. நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்க உள்ளார்.

Related Stories: