உதகை: உதகை மண்டலத்தில் நடைபெற்று வரும் 123-வது மலர் கண்காட்சியின் இறுதி நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். உதகை மண்டலத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 17-ம் தேதி மலர் கண்காட்சி தொடங்கியது. 5 நாள் கண்காட்சிகாக 15 ஆயிரம் தொட்டிகளில் பல ஆயிரம் மலர்கள் வைக்கப்பட்டு இருந்தது. மலர்களால் உருவாக்கப்பட்ட வன விலங்குகள், நாடாளுமன்றம் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.