திருமலை: ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அக்னி வெயில் சுட்டெரித்து வருகிறது. இங்கு 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இம்மாவட்டத்தில் மட்டும் வெயில் தாங்காமல் 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் ஹரிகிருஷ்ணா, தனது குடும்பத்தினருடன் ஆந்திராவின் சதாசிவ கோனா அருவியில் குளிப்பதற்காக நேற்று முன்தினம் வந்தார். வனப்பகுதி உள்ளே சென்றபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை கவனித்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஹரிகிருஷ்ணா வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் இறந்ததாக தெரிவித்தனர்.