போபால் : நாதுராம் கோட்சே எப்போதும் தேச பக்தர்தான் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியிருந்த நிலையில், அவரது பேச்சுக்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து, அவர் பெயர் கோட்சே என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பேச்சு தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் கடும் சர்ச்சையினை உண்டாக்கியது. இது தொடர்பாக போபாலில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரக்யா சிங், நாதுராமன் கோட்சே ஒரு தேச பக்தராக இருந்தார், இப்போதும் தேசபக்தராக இருக்கிறார் இனியும் தேசபக்தராகதான் இருப்பார் என கூறினார்.