ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.இந்த தாக்குதலில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், சம்பவ இடத்தில் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு படை தெரிவித்தது. கொல்லப்பட்ட தீவிரவாதி எந்த இயக்கத்தை சேர்ந்தவர் என்று அடையாளம் காணும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.