திருமலை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. வருகிற 12-ம் தேதி இரவு ஐதராபாத்தில் இறுதி போட்டி நடக்கிறது. மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா அவரது மனைவி ரித்திகா, குழந்தை சமைரா ஆகியோருடன் இன்று காலை திருப்பதி வந்தார். காலை 5 மணிக்கு ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார்.