விளம்பர மன்னன் வளர்ச்சிக்கு வில்லன்: மோடி பற்றி காங். வர்ணனை

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜாய்வீர் செர்கில் நேற்று டெல்லியில் அளித்த பேட்டி: நிகழ்ச்சி மேலாண்மையில் காட்டும் ஆர்வத்தை பிரதமர் மோடி, தேச மேலாண்மையில் காட்டவில்லை. பிரதம அமைச்சராக இருப்பதற்கு பதில் பிரசார அமைச்சராக செயல்படுகிறார். வாக்காளர்களுக்கு அவர்  அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் கானல் நீர் போன்று வெற்று வாக்குறுதிகள். மோடி அரசின் திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்து விட்டன. கடந்த 2016ம் ஆண்டு பாஜ கூட்டணி அரசால் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் பிரதமரின் பேச்சு அடங்கிய வெற்று கேஸ்’ திட்டம்தான்.

மோடி எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை அவர் கேமராவுக்கு போஸ் மட்டுமே கொடுத்து வருகிறார். விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்தும் பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி திட்டம் பூஜ்யம் என்ற அளவிலே உள்ளது. வளர்ச்சி திட்டங்களுக்கு அவர் வில்லனாகவே இருக்கிறார் என்பதே உண்மை நிலவரம்.

கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனை குறித்த எந்த அறிக்கையையும் அவர் வெளியிடவில்லை. பாகிஸ்தான் பற்றியே பிரதமர் பேசுகிறாரே ஏன்? என ஆராய்ந்தால் அவர் இந்துஸ்தானுக்காக எந்த பணியையும் செய்யவில்லை என்பது புரியும். பாஜவின் 5 ஆண்டு கால ஆட்சி வெற்று சிலிண்டர் போன்றது. சிலிண்டர் விலையில் நடுத்தர மக்களிடம் மோடி அரசு கொள்ளையடித்து உள்ளது.

Related Stories: