புதுடெல்லி: தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளர் அரவிந்த கெஜ்ரிவால் உள்ளிட்ட அக்கட்சி தலைவர்கள் மீது சரமாரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் தாமதிப்பதாக தேர்தல் ஆணையத்தை பாஜ சாடியுள்ளது. மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள சந்தித்து பாஜவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான விஜேந்தர் குப்தா கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் உள்பட அக்கட்சியினரின் தேர்தல் நடத்தை விதிமீறல்களை விரிவாக எடுத்துரைத்து தலைமை தேர்தல் ஆணையர் உள்பட தேர்தல் அதிகாரிகளான உங்களிடம் இதுவரை ஏகப்பட்ட புகார்களை அளித்துள்ளோம். கடுமையான நடவடிக்கையை அவர்கள் மீது எடுக்கும்படி வலியுறுத்தி இருந்தோம்.