நைஜீரியாவில் இந்திய மாலுமிகள் 5 பேர் கடத்தல்

புதுடெல்லி:  நைஜீரியாவில் கடற்கொள்ளையர்களால் இந்திய மாலுமிகள் 5 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் இது குறித்து நடவடிக்கை  எடுக்கும்படி, இந்திய தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா கூறியுள்ளார். நைஜீரியாவில் இந்தியாவைச் சேர்ந்த மாலுமிகள் 5 பேர் கடற்கொள்ளையர்களால் நேற்று முன்தினம் கடத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பதிவில், “இந்திய மாலுமிகளை கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக  வந்த செய்தியை அறிந்தேன். நைஜீரியா அரசுடன் இணைந்து மாலுமிகளை விடுப்பதற்கான நடவடிக்கை மேற்ெகாள்ளும்படி இந்திய தூதரக  அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: