புதுடெல்லி: மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் யெச்சூரி நேற்று தனது டிவிட்டர் பதிவில், `‘தனது ஆட்சியில் தொடரும் தோல்விகளில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது. கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு வேலை வாய்ப்பின்மை, நுகர்வோர் வாங்கும்தன்மை குறைவு உள்ளிட்டவற்றை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்சியில் அவரது தொழிலதிபர் நண்பர்களை தவிர வேறு யாரும் பயனடையவில்லை. கடந்த 2014 முதல், அவர்களது ரூ.5.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.