லண்டன் : ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் 21 நாள் தடை விதிக்கப்பட்டதை அடுத்து, ஐசிசி உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் ஹேல்சிடம் நடத்தப்பட்ட 2வது ஊக்கமருந்து சோதனையிலும் அவர் தடை செய்யப்பட்ட ‘பொழுதுபோக்கு’ போதை மருந்தை உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 3 வாரங்களுக்கு அவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஹேல்ஸ் உடனடியாக நீக்கப்பட்டார்.