சென்னை : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது. கிழக்கு இந்திய பெருங்கடல்- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது சென்னை தென்கிழக்கே 1490 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு தென்மேற்கே 1760 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 30-ம் தேதி வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திர கடல்பகுதியை நெருங்கும் என்றும் வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திராவில் ஏப்.30 மற்றும் மே 1-ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றவர்கள் வரும் 28-ம் தேதிக்குள் கரை திரும்ப வானிலை மையம் அறிவுரை வழங்கியுள்ளது.