வாரணாசி: உ.பி. மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட பேரணியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மோடி பேரணியில் பல்லாயிரக்கணக்கான பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.