திருப்பதி: மதுகுடிக்க நண்பன் வரமறுத்ததால், வீடியோ கால் செய்து தூக்குப்போட்டு கொள்வேன் என மிரட்டிய மெக்கானிக் உயிரிழந்தார். திருப்பதி அடுத்த திருச்சானூர் இந்திரா குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சங்கர். இவரது மகன் சிவக்குமார்(25). இவர் திருப்பதியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர், நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி மதுகுடிப்பது வழக்கமாம்.இந்நிலையில், நேற்று முன்தினம் சிவக்குமார் குடித்துவிட்டு, போதை அதிகமான நிலையில், தனது நண்பரை குடிப்பதற்கு அழைத்தாராம். அவர் மறுநாள் வருவதாக கூறினாராம்.