வால்பாறை: வால்பாறை தோனிமுடி முதல் பிரிவில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் 12 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரமாக பெய்து வரும் கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அரைமணி நேரமாக மிதமான மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.