லக்னோ: உத்திரபிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியில் வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது பாஜக தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வாக்குச்சாவடி அதிகாரி கூறியதாக புகார் கூறி அவருடன் மோதலில் ஈடுபட்டனர். விரைந்து வந்த போலீசார் பாஜக தொண்டர்களிடம் இருந்து வாக்குச்சாவடி அதிகாரியை அழைத்துச் சென்றனர்.