மொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கென்யா

ரபாத்: மொராக்கோவின் ரபாத் நகரில் சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 24 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் கென்யாவைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் சமி கிகன் பந்தய தூரத்தை 2 மணி 2 நிமிடம் 12 வினாடிகளில் கடந்து புதிய சாதனையுடன், முதல் பரிசை தட்டிச் சென்றார்.

மொராக்கோ வீரர் ஆத்மனே எல் கவும்ரி பந்தய தூரத்தை 2 மணி 8 நிமிடம் 20 வினாடிகளில் கடந்து இரண்டாம் இடம் பிடித்தார். எத்தியோப்பிய வீரர் சிலி டிசாசா மூன்றாம் பரிசை வென்றார். பெண்கள் பிரிவில் கென்ய வீராங்கனை சில்வியா கிபட் 2 மணி, 25 நிமிடம், 52 வினாடிகள் என்ற சாதனையுடன் முதல் பரிசை வென்றார். இதேபோல் கென்யாவின் செல்மித் மியூரிகி, பிரிஸ்கா செரோனோ ஆகியோர் 2 மற்றும் 3வது பரிசை தட்டிச்சென்றனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: