ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (75). பாஜ தொண்டர். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர், நேற்று முன்தினம் இரவு அண்ணா சிலை அருகே உள்ள டீக்கடை முன்பு பிரதமர் மோடி படம் பொறித்த பேட்ஜை தனது சட்டையில் அணிந்து கொண்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்தவர்களிடம், ‘‘பிரதமர் மோடி மிகவும் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். அடுத்த முறையும் அவர்தான் பிரதமராக வருவார்’’ என்று என்று பேசி கொண்டிருந்தார். அப்போது, ஒரத்தநாடு அடுத்த கண்ணந்தங்குடியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் கோபிநாத் (22) என்பவர் அங்கு வந்தார். கோவிந்தராஜின் பேசுவதை கேட்டு கொண்டிருந்த அவர், ‘‘என்ன பிரதமர் மோடி உனக்கு எவ்வளவு பணம் கொடுத்தார், மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து கொண்டிருக்கிறாயா’’ என்று கூறி கோவிந்தராஜிடம் தகராறு செய்தார்.