சாயல்குடி: கடலாடி கோயில் விழாவில் சேத்தாண்டி வேடமிட்ட பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் வருடாந்திர பொங்கல் விழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம் மற்றும் யாக சாலைகள் வளர்க்கப்பட்டு விழா தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை, திருவிளக்கு பூஜை, கொலுமாவு பூஜை, காவு கொடுத்தல் பூஜை ஆகியவை நடந்தது.