அறந்தாங்கி: அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மர்மநபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் பெரியார் சிலையின் தலையை துண்டித்த மர்மநபர்களை அறந்தாங்கி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.