சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் பெரும்பாலானோர் வேலை, படிப்பு மற்றும் தொழில் நிமித்தமாக வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு வந்து தங்கி உள்ளனர். அந்த வகையில் பல லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இன்றும் சொந்த ஊரில் இருக்கிறது. இவர்களில் கூலித்தொழிலாளிகள் முதல் பெரி நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் வரை பலர் மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களின் ரேசன் கார்டை சென்னை முகவரிக்கு மாற்றுவதில்லை. சொந்த ஊரிலேயே ரேசன் கார்டுகளை வைத்துள்ளனர். தேர்தலை ஒட்டி தொடர் விடுமுறை வருவதால், தனியார் பஸ் கட்டணமும் மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையின் ஒரு பகுதியில் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெருவாரியாக உள்ளனர். அவர்கள் தங்கள் மாவட்டத்துக்கு சென்று தேர்தலில் வாக்களித்துவிட்டு வர, இலை சார்பில் இலவச ஏசி பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.