விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார். சீட் கிடைக்காத அதிருப்தியில் உள்ள மற்றொரு முன்னாள் அதிமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். எட்டயபுரம் பகுதியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்தபின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் செய்துள்ளார். பிளாட் நிலங்களுக்கு அப்ரூவல் வழங்கும் விவகாரத்தில் ஒரு சதுர அடிக்கு ரூ.3 வீதம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் புரிந்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. தர்மயுத்தம் நடக்கும்போது பெரியகுளத்தில் கோயில்கட்டி அங்கு இருப்பேன் என்றார்.