சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை மூர்மார்க்கெட், வில்லிவாக்கத்தில் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. திருத்தணி- அரக்கோணம் இடையே காலை 8.50 மணிக்கும், திருத்தணி- மூர்மார்க்கெட் இடையே காலை 9.40 மணிக்கு சிறப்பு ரயில்கள் ஆவடி வரை இயக்கப்படுகிறது.மேலும் அரக்கோணம்- மூர்மார்க்கெட் இடையே காலை 8.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆவடி வரையும், அரக்கோணம்- திருத்தணி இடையே காலை 11.55, 1.50, 2.25 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் திருவள்ளூர்- மூர்மார்க்கெட் இடையே காலை 9.10 மணிக்கும் புறப்படும் ரயில் ஆவடி வரையும், திருவள்ளூர்-மூர்மார்க்கெட் வரை இயக்கப்படும் மின்சார ரயில் திருவள்ளூரில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு இயக்கப்படும்.